வணக்கம் வணக்கம் வணக்கம் . . .!!!
எல்லாரும் வந்தாச்சுல . .அப்பறம் ரெண்டு பேரு விட்டு போச்சு நாலு பேரு விட்டு போச்சுன்னு பேச்சே இருக்க கூடாது . . .!!
என் இன்டர்நெட் வாழ்க்கை தொடங்கி நான்கு வருடம் கழிச்சு இப்ப தான் இந்த ப்ளாக் பத்தியே தெரிஞ்சிகிட்டேன். கொஞ்சம் லேட் தான் விடுங்க (ரொம்ப லேட்டோ..??). என்னை போன்ற ஒருத்தனை இத்தனை நாள் இழந்ததுக்கு இந்த ப்ளாக் தான் வருத்தப்படணும். நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க அதான் வந்துட்டேன்ல . .
ரொம்ப கைத்தேர்ந்தவர் ரேஞ்சிக்கு எதிர்ப்பார்க்காதீங்க, அப்பறம் உங்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும். . ஹிஹி. . எழுத்து நடையில் எதாவது தவறுகள் இருக்கலாம், பிறந்த குழந்தை உடனே நல்லா பேசிடாதுங்க .. என்னை கொழந்தையா நினைச்சி மன்னிச்சுடுங்க வளர வளர திருத்திக்குறேன் . .
அன்புடன்,
கிஷோக்